பெங்களூரில் கிறிஸ்தவ குரு மடத்தில் பாதிரியார் ஞாயிற்றுக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
பெங்களூர் யஸ்வந்தபுரம் பழைய மைசூர் லேம்ப் சாலையில் புனித செயின்ட் பீட்டர்ஸ் கத்தோலிக்க கிறிஸ்தவ குருமடம் உள்ளது. இங்கு பாதிரியார்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இதன் முதல்வராக இருந்தவர் உதகமண்டலத்தைச் சேர்ந்த பாதிரியார் தாமஸ் (60). குருமடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கியிருந்த அவரை மர்ம நபர்கள் ஆயுதங்களால் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்த யஸ்வந்தபுரம் போலீஸார் தாமஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
பெங்களூர் மாநகரக் காவல் துறை ஆணையர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி, துணை ஆணையர் சித்தராமையா, பெங்களூர் கத்தோலிக்க மறை மாவட்டப் பேராயர் பெர்னார்ட் மோரஸ் ஆகியோர் பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


