2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியதற்கு எதிராக பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுநீல் பார்தி மிட்டல் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
2002-ஆம் ஆண்டு கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் மீதான விசாரணை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக விசாரிக்க சுநீல் மிட்டல், எஸ்ஸôர் குழும நிறுவனர் ரவி ரூயா, ஹட்சிஸன் மாக்ஸ் நிறுவனத்தின் அன்றைய நிர்வாக இயக்குநர் அசீம் கோஷ் ஆகியோர் ஏப்ரல் 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுநீல் மிட்டல் திங்கள்கிழமை முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்தார்.
இந்த விவகாரத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரத்தில் மிட்டல் பெயர் இடம்பெறவில்லை.
இந்த வழக்கில் தொலைத் தொடர்பு அமைச்சக அதிகாரிகள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த எவர் பெயரும் இடம்பெறவில்லை.
முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் கால கட்டத்தில் இவர்கள் மூவரும் தங்கள் நிறுவனங்களில் முக்கிய முடிவெடுக்கும் நிலையில் இருந்தனர். அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே அவர்களை விசாரிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


