ஆந்திரத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலத் தலைவர் கிஷன் ரெட்டி தலைமையில் தொடர்ந்து 3ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
மின்கட்டண உயர்வைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள், தெலுங்கு தேசம் என எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சுழற்சி அடிப்படையில் பழைய எம்எல்ஏ விடுதியில் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். அவர்களது உண்ணாவிரதம் முடிந்த பின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஏ.லட்சுமிநாராயணா உள்ளிட்டோர் உண்ணாவிரதம் தொடங்கினர். இந்த உண்ணாவிதம் தொடர்ந்து 3ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்தது.
மாநிலத் தலைவர் கிஷன் ரெட்டி மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த மற்ற எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர். 3ஆவது நாளன்று முன்னாள் மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, வித்யாசாகர், ஆந்திர பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணய்யா, ஜெயப்பிரகாஷ் நாராயணா எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


