நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் விதிமுறைகளை மேற்பார்வைக் குழு பின்பற்ற கர்நாடகம் எதிர்ப்பு

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளைக் காவிரி மேற்பார்வைக் குழு பின்பற்றக் கூடாது என்று கர்நாடக அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2013, 4:34 am IST

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளைக் காவிரி மேற்பார்வைக் குழு பின்பற்றக் கூடாது என்று கர்நாடக அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கர்நாடக தலைமைச் செயலர் எஸ்.வி. ரங்கநாத், காவிரி மேற்பார்வைக் குழுவின் தலைவர் சர்காருக்கு 48 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அனுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மார்ச் மாதம் மனு தாக்கல் செய்தது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், காவிரி மேற்பார்வைக் குழுவை அமைக்க வேண்டும் என்று மட்டும் உத்தரவிட்டது.

தற்போது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை காவிரி மேற்பார்வைக் குழு பின்பற்றுவதால் அது மேலாண்மை வாரியத்தை மறைமுகமாக அமைப்பதற்கு சமமாகும். தமிழகத்துக்குத் தேவையான 192 டிஎம்சி நீரை ஆண்டுதோறும் கர்நாடகம் வழங்கிய பின்னர் மீதமுள்ள நீரைக் கர்நாடகம் தனது பயன்பாட்டுக்குப் பயன்படுத்தி கொள்ளலாம், அதில் மேற்பார்வைக் குழு தலையிட முடியாது.

சம்பந்தப்பட்ட மாநிலத் தலைமைச் செயலர்களைத் தவிர, அதே மாநிலத்தைச் சேர்ந்த வேறு அதிகாரிகள் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று கடிதத்தில் கர்நாடகம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.