நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலா ஜாமீனில் விடுவிப்பு

மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலா ஆகியோர் தில்லி திகார் சிறையில் இருந்து செவ்வாய்க்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

News image
Updated On :12 ஜூன் 2013, 4:57 am IST

மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலா ஆகியோர் தில்லி திகார் சிறையில் இருந்து செவ்வாய்க்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களுடன் கைது செய்யப்பட்ட அங்கீத் சவாண் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை எனவே அவர் விடுவிக்கப்படவில்லை.

சிறையில் வெளியே வந்த ஸ்ரீசாந்த், தில்லியில் தனது வழக்குரைஞரின் இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: நடந்து முடிந்த சம்பவங்களை நான் மறக்க விரும்பவில்லை. இது எனக்கு பல பாடங்களைக் கற்றுத்தந்துள்ளது. உண்மையான உத்வேகத்துடன்தான் நான் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றேன். எனது மனதையும், ஆன்மாவையும் கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்துள்ளேன் என்றார்.

உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் என்ன செய்யவீர்கள் என்ற கேள்விக்கு, "இந்திய நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது' என்று ஸ்ரீசாந்த் பதிலளித்தார்.

ஜாமீன் கிடைத்தபின் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். கடவுளின் கருணை எனக்கு உள்ளது. சோதனைக் காலத்தில் எனக்கு ஆதரவளித்த ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், வழக்குரைஞர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்ரீசாந்த் கூறினார்.

ஐபிஎல் போட்டிகளில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலா, அங்கீத் சவாண் ஆகியோர் மே 16-ம் தேதி தில்லி போலீஸôரால் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.