கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

உத்தரகண்டில் மீண்டும் மழை: 7 பேர் சாவு

உத்தரகண்ட் மாநிலத்தில் புதன்கிழமை பெய்த பலத்த மழைக்கு 7 பேர் உயிரிழந்தனர்.

Updated On :12 ஜூலை 2013, 1:26 am IST

உத்தரகண்ட் மாநிலத்தில் புதன்கிழமை பெய்த பலத்த மழைக்கு 7 பேர் உயிரிழந்தனர்.

சமோலி மாவட்டத்தில் திகெüனா கிராமத்தில் உள்ள வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். பலத்த மழையினால் மலைப்பகுதியில் இருந்த பாறைகள் உருண்டு வீட்டின் மீது விழுந்ததாக கூடுதல் மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் 2 குழந்தைகள், 3 பெண்கள் அடங்குவர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் இருவரின் உடல்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவம்: கார்வால் பகுதியில் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி எந்திரம் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.