தென்கொரிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 8 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து மத்தியப் பிரதேச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்தத் தவறும்பட்சத்தில் கூடுதலாக மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்கொரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா வந்தார். உமாரியா மாவட்டம் பந்தவ்கார் என்ற இடத்தில் உள்ள சுற்றுலா விடுதியில் (ரிசார்ட்) தங்கியிருந்தார்.
அந்த விடுதியின் மேலாளரான தீபக் விஷ்வகர்மா அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு உமாரியா மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதி அகிலேஷ் பாண்டியா செவ்வாய்க்கிழமை மேற்கண்டவாறு தீர்ப்பு அளித்தார். வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ், தீபக் விஷ்வகர்மாவுக்கு மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிபதி, அதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுக்கு ரூ. 3,000 கோடி வழங்குவதாக பரவும் செய்தி பொய்! டிரம்ப்

உணவை சூடாக்கிச் சாப்பிடலாமா? குடல் தொற்றுக்கும் ஃபுட் பாய்சனுக்கும் வித்தியாசம் என்ன?
மக்களின் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? மு.க. ஸ்டாலின் கேள்வி!






