நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

கோர்காலாந்து கோரி டார்ஜிலிங்கில் மீண்டும் காலவரையற்ற போராட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில், கோர்காலாந்து தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தி வரும் கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜி.ஜே.எம்.) அமைப்பினர், ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Updated On :1 செப்டம்பர் 2013, 11:10 pm IST

மேற்கு வங்க மாநிலத்தில், கோர்காலாந்து தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தி வரும் கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜி.ஜே.எம்.) அமைப்பினர், ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் தனி மாநிலம் கோரி ஜி.ஜே.எம். தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது. போராட்டத்திற்கு நடுவே, சனிக்கிழமை ஒரு நாள் ஒய்வு அறிவிக்கப்பட்டது. அந்த நாளில், ஜி.ஜே.எம்.யின் இப்போதைய மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் புது தில்லி சென்று காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்து தங்களது தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்துவார்கள் என கூறப்பட்டது. போராட்டம் ஓய்ந்திருந்த நாளில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை வாங்கி வீடுகளில் சேமித்து வைத்துக் கொண்டனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது.

போராட்டத்தையொட்டி, கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் வாகனப் போக்குவரத்து இல்லை. எனினும், சமவெளிப் பகுதியில் உள்ள சிலிகுரியில் இருந்து மாநில அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்கள் வந்து சென்றன.

இதனிடையே, ஜி.ஜே.எம்.மின் பொதுச் செயலர் ரோஷன் கிரி, கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு புது தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால் அது அவரது தனிப்பட்ட பயணம் என கூறப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுமா? ஜி.ஜே.எம்.மின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர் பிரிவு ஞாயிற்றுக்கிழமை மாலையில் கூடி, பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவு செய்ய உள்ளது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு குறித்து, போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் கோர்காலாந்து கூட்டு நடவடிக்கை குழுவிடம் தெரிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, "கார் பித்ரா ஜன்டா' (வீட்டுக்குள்ளேயே இருப்பது) என்ற போராட்டம் திங்கள், செவ்வாய் (செப். 2,3) ஆகிய இரண்டு நாள்களும் நடைபெறும் என ஜி.ஜே.எம். அறிவித்துள்ளது.

இந்த போராட்டங்களுக்கு மத்தியில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, செவ்வாய்க்கிழமை மலைப் பகுதியில் உள்ள கலிபாங்க் பகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.