நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்?

உணவு பாதுகாப்பு மசோதாவை இன்னும் 10 அல்லது 15 நாள்களில் நிறைவேற்றுவதற்கான பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது என மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்துள்ளார்.

Updated On :13 மே 2013, 3:05 am IST

உணவு பாதுகாப்பு மசோதாவை இன்னும் 10 அல்லது 15 நாள்களில் நிறைவேற்றுவதற்கான பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது என மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை தாமஸ் கூறியதாவது: உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற மூன்று வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம். ஒன்று அவசரச் சட்டம் பிறப்பிப்பது, அல்லது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது, இல்லையென்றால் அரசாணை பிறப்பித்து மசோதாவின் சில அம்சங்களை நிறைவேற்றுவது உள்ளிட்டவை ஆகும்.இதுதொடர்பாக இன்னும் 10 அல்லது 15 நாள்களில் மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும் என்றார்.

கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உணவு பாதுகாப்பு மசோதா முதன்முறையாக மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் முறைகேடு புகார்கள் தொடர்பாக அமைச்சர்கள் பவன்குமார் பன்சால், அஸ்வனி குமார் பதவி விலகினால் தான் அம்மசோதாக்களை நிறைவேற்ற அனுமதிப்போம் என எதிர்க்கட்சிகள் கூறின. இதனால் அம்மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.