உணவு பாதுகாப்பு மசோதாவை இன்னும் 10 அல்லது 15 நாள்களில் நிறைவேற்றுவதற்கான பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது என மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை தாமஸ் கூறியதாவது: உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற மூன்று வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம். ஒன்று அவசரச் சட்டம் பிறப்பிப்பது, அல்லது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது, இல்லையென்றால் அரசாணை பிறப்பித்து மசோதாவின் சில அம்சங்களை நிறைவேற்றுவது உள்ளிட்டவை ஆகும்.இதுதொடர்பாக இன்னும் 10 அல்லது 15 நாள்களில் மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும் என்றார்.
கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உணவு பாதுகாப்பு மசோதா முதன்முறையாக மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் முறைகேடு புகார்கள் தொடர்பாக அமைச்சர்கள் பவன்குமார் பன்சால், அஸ்வனி குமார் பதவி விலகினால் தான் அம்மசோதாக்களை நிறைவேற்ற அனுமதிப்போம் என எதிர்க்கட்சிகள் கூறின. இதனால் அம்மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடரும் பாலியல், கொலை... முதல்வர் ஜோசப் விஜய்யின் வீரவசனம் என்ன ஆனது? - டிடிவி தினகரன் கேள்வி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக் கொலை!

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


