மொபைல் இணைப்பு துண்டிப்பு: டிராய், மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மொபைல் போன்களின் அழைப்பு துண்டிக்கப்படும் விவகாரத்தில் பதிலளிக்குமாறு டிராய் மற்றும் மத்திய அரசுக்கு
மொபைல் இணைப்பு துண்டிப்பு: டிராய், மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

பேசிக் கொண்டிருக்கும் போது மொபைல் போன்களின் அழைப்பு துண்டிக்கப்படும் விவகாரத்தில் பதிலளிக்குமாறு டிராய் மற்றும் மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பேசிக் கொண்டிக்கும் போது அழைப்பு துண்டிக்கப்படுவதாக மொபைல் சேவை பயன்படுத்தி வருபவர்கள் நீண்ட நாள்களாக புகார் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து இந்தியாவில் தொலைபேசி நிறுவனங்களை கண்காணித்து வரும் தொலைபேசி ஒழுங்காற்று ஆணையம் (டிராய்), ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல், பேசிக் கொண்டிருக்கும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டால் மொபைல் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு ஒரு ரூபாய் திருப்பி அளிக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி உத்தரவிட்டது. இது வருகிற ஜனவரி 2016 முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தது.

இதை எதிர்த்து மொபைல் நிறுவனங்களின் கூட்டமைப்புகளான செல்லுலார் ஆபரேட்டர் அசோஷியேசன் ஆப் இந்தியா, அசோஷியேசன் ஆப் யூனிபைட் டெலிகாம் சர்வீஸ் புரோவைடர்ஸ் ஆப் இந்தியா தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

டிராய் உத்தரவு முரண்பாடாகவும், செல்லுலார் சேவைய அழிக்கும் வகையிலும் உள்ளது. மேலும், சட்ட விதிமுறைகளின்படி, வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு டிராய்க்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிட்டன.

வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ஜி.ரோகிணி மற்றும் நீதிபதி ஜெயந்த் நாத் ஆகியோர் இவ்வழக்கில் மத்திய அரசு, டிராய் ஆகியோர் தங்களது பதில் மனுவை வருகிற 22 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com