இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள வெள்ளைப் பகுதியில் ஏதாவது எழதப்பட்டிருந்தால் அவை செல்லாது சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையல்ல என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
இந்திய ரூபாய் நோட்டுகளில் ஏதாவது கிறுக்கப்பட்டிருந்தால் அவை வரும் ஜனவரி முதல் செல்லாது என்ற தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், அந்த தகவல் உண்மையில்லை. ரூபாய் நோட்டுகளில் எழுதியிருந்தாலும் அவை பண பரிமாற்றத்துக்கு ஏற்றுக் கொள்ளப்படும். மக்கள் எவ்வித அச்சமின்றி பண பரிமாற்றத்தில் ஈடுபடலாம் என்றார்.
மேலும், இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி எவ்வித அறிவிக்கையும் வெளியிடவில்லை என ஆடியோ வடிவில் வெளியிட்டுள்ள தகவலில் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், ரூபாய் நோட்டுகளில் எழுதுவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால், நோட்டுகளின் ஆயுள் குறைந்துவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

இன்றைய ராசி பலன்கள் (24 ஏப்ரல் 2026) மேஷம் - மீனம்! பொறுப்புகள் கூடும் இந்த ராசிக்கு!

அக்னிப் பசி!

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


