மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில், தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் உட்பட 6 பேருக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அரவிந்த் கேஜரிவால், குமார் விஸ்வாஸ், ஆசுதோஷ், சஞ்சய் சிங், ராகவ் சதா, தீபக் ராஜ்பாய் ஆகியோர், அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள மனு மீது 2016ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்பட ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் 6 பேர் மீது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தில்லி உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மானநஷ்ட வழக்கு தொடுத்தார்.
தில்லி கிரிக்கெட் சங்க விவகாரத்தில், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனது நற்பெயருக்கு ஆம் ஆத்மி தலைவர்கள் களங்கம் விளைத்ததாகவும், அதற்கு இழப்பீடாக ரூ.10 கோடியை அவர்களிடமிருந்து பெற்றுத் தருமாறு தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தவிர, தில்லி பாட்டியலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் கேஜரிவால் உள்ளிட்டோருக்கு எதிராக மற்றொரு அவதூறு வழக்கையும் அருண் ஜேட்லி தொடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.