குஜராத்தில் சிங்கம் தாக்கியதில் 6 வயது சிறுவன் உள்பட இருவர் சாவு

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இரு வேறு சம்பவங்களில் சிங்கம் தாக்கியதில், 6 வயது சிறுவன் உள்பட இருவர் இறந்தனர்.
Updated on
1 min read

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இரு வேறு சம்பவங்களில் சிங்கம் தாக்கியதில், 6 வயது சிறுவன் உள்பட இருவர் இறந்தனர்.

ஜூனாகத்-மாவட்டத்தில் உள்ள மாலியா ஹட்டினா நகரைச் சேர்ந்த ரூமல்சிங் என்பவரின் 6 வயது மகன் ரோஹித் இயற்கை உபாதையா கழிப்பதற்காக அருகே இருந்த காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த சிங்கம் ஒன்று ரோஹித்தை தாக்கியது. இதில் அவர் சடலமாக நேற்று காலை மீட்கப்பட்டதாக வனத்துறை அலுவர் ஜெ.என்.கரங்கையா கூறினார்.

இதேபோல, பேஷன் நகர் அருகே காட்டை கடந்து செல்ல முயன்ற ஹன்ஸபேன் தமீஷா (45) என்ற பெண்ணையும் சிங்கங்கள் தாக்கியது.

படுகாயங்களுடன் பேஷன் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு இறந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com