

இந்திய இளைஞர்கள் நாட்டு மக்களிடையே தேசப்பற்றை பரப்ப வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று மாணவர்களிடையே உரையாற்றிய ராஜ்நாத் சிங், சில சமூக விரோதிகள் இளைஞர்களை திசை திருப்பி வருகிறார்கள். அவர்கள் குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருந்து, இந்தியா எங்கள் நாடு, அது எப்போதும் எங்கள் நாடாகவே இருக்கும் என்பதை நிரூபிக்க வேண்டும் என பேசினார்.
உள்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாணவர்களுக்கான சுற்றுலா நிகழ்ச்சியில் சுமார் 250 இளைஞர்கள் பங்கேற்றனர்.
நாட்டின் பிற பகுதிகளையும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சுமார் 15 - 24 வயதுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த சுற்றுலா திட்டத்தில் இணைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.