கேரள அரசின் புதிய மதுக்கொள்கையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது, அரசின் கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரம் என முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.
திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேரள அரசின் புதிய மதுக் கொள்கை என்பது நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவாகும். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது அரசின் கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.
கேரளத்தின் பிரதான எதிர்க்கட்சியான மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணி, மதுக்கொள்கை குறித்த தங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும்.
அடுத்த 10 ஆண்டுக்குள் கேரளத்தில் முழு மதுவிலக்கை கொண்டு வரும் வகையில், புதிய மதுக் கொள்கையை காங்கிரஸ் அரசு அறிவித்தது.
இதன்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் மதுக் கடைகளை மூடுவது, 5 நட்சத்திர ஹோட்டல் அந்தஸ்துக்கு கீழ் உள்ள ஹோட்டல்களுடன் இணைந்துள்ள 700 மது பார்கள் மூடுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதை எதிர்த்து, மதுபானகூட உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலி ஆவணத்துடன் இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தானியர் கைது!

மதுரையில் ஏன் கருப்பு இசை வெளியீட்டு விழா?

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu

அடுத்த ஒரு வாரத்திற்கு.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


