ஐஐடி கான்பூர்: தோல்வி அடைந்த 12க்கும் அதிகமான மாணவர்கள் நீக்கம்

தங்களது பிரிவுகளில் சரியாக படிக்காமல் தோல்வியடைந்த 12க்கும் அதிகமான மாணவர்கள் கான்பூர் ஐஐடியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
Updated on
1 min read

தங்களது பிரிவுகளில் சரியாக படிக்காமல் தோல்வியடைந்த 12க்கும் அதிகமான மாணவர்கள் கான்பூர் ஐஐடியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்கள் நிறுவனம் அமைத்துள்ள குழுவினரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அதன் இயக்குநர் இந்திராணி மானா கூறியுள்ளார்.

ஐஐடி கான்பூர் நிறுவனத்தில் பயிலும் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தங்களது பிரிவுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தோல்வியடைந்தனர். இதையடுத்து அவர்களை நிறுவனத்திலிருந்து நீக்கம் செய்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

தோல்வியடைந்த மாணவர்கள் நிறுவனம் அமைத்துள்ள குழுவில் மேல்முறையீடு செய்யலாம். அவர்களது மனுவை ஆட்சிக் குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என துணை பதிவாளர் ஏ.கே.மிஸ்ரா கூறினார்.

தோல்வியடைந்த மாணவர்கள் நிறுவனத்தை விட்டு நீக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். இது அனைத்து ஐஐடிகளிலும் ஆண்டுதோறும் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும், இச்செய்தியை ஊடகங்கள் பெரிதுபடுத்துவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com