தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு புத்தாண்டில் தீர்மானம் எடுங்கள்: காங்கிரஸ் மீது மோடி தாக்கு

நாடாளுமன்றத்தை ஒழுங்காக நடத்துவதற்கு புத்தாண்டிலாவது தீர்மானம் எடுங்கள் என காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி.

News image
Updated On :31 டிசம்பர் 2015, 9:41 am

நாடாளுமன்றத்தை ஒழுங்காக நடத்துவதற்கு புத்தாண்டிலாவது தீர்மானம் எடுங்கள் என காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி. நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவதால் சரக்கு-சேவை வரி உள்ளிட்ட முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படாததால், நாட்டின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது என்றார் மோடி.

நோய்டாவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசியதாவது:

கடந்த 60 ஆண்டுகளாகப் பதவியை அனுபவித்த காரணத்தாலேயே நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவதற்கு எந்த உரிமையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியை மறைமுகாக தாக்கினார். மேலும், அரசியல் காரணங்களால் நாட்டின் வளர்ச்சியை முடக்கக் கூடாது என்றார்.

சட்டம் இயற்றும் நாடாளுமன்றம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் துரதிர்ஷ்டம். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தற்போது நாடாளுமன்ற செயல்பாட்டை முடக்கியுள்ளனர்.

நாளை ஜனவரி முதல் நாள். புத்தாண்டை கொண்டாடும் இந்நேரத்தில்,த நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவதற்கு தீர்மானம் எடுங்கள். நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக இருக்காதீர்கள்.

அனைத்து அரசியல் கட்சிகளையும் வேண்டுவது என்னவென்றால், நாடாளுமன்றத்தை சமூகமாக நடத்துவதற்கு ஒத்துழையுங்கள். அங்கு எனக்குப் பேச வாய்ப்பு கிடைக்காததால், மக்கள் மன்றத்தில் பேசுகிறேன். நாடாளுமன்றத்தில் பேசவும், விவாதிக்கவும், முடிவெடுக்கவும்தான் மக்கள் எங்களை அங்கு அனுப்பிவைத்துள்ளனர்.

ஆட்சி அதிகாரத்தைப் பறிகொடுத்தவர்களின் கோபம் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். அதேநேரத்தில் 60 ஆண்டுகள் பதவியை அனுபவித்தவர்கள் நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு அதிகாரம் இல்லை.

வரும் புத்தாண்டு முதல் மத்திய அரசின் மூன்றாம் மற்றும் நான்காம் பிரிவு பணிகளுக்கான தேர்வுகளில் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மக்களுக்கான புத்தாண்டு பரிசாகும். இந்த உத்தரவை மாநில அரசுகளும், மாநிலப் பணிகளுக்கான தேர்வுகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார் பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.