தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

இந்தியா-பாகிஸ்தான் சோதனை சாவடி மீது காரில் மோதிய வெளிநாட்டு வாழ் இந்தியர் கைது

வாஹா அருகேயுள்ள இந்தியா- பாகிஸ்தான் கூட்டு சோதனைச் சாவடி மீது காரில் வந்து மோதியது தொடர்பாக வெளிநாட்டுவாழ் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Updated On :16 நவம்பர் 2015, 10:25 am

வாஹா அருகேயுள்ள இந்தியா- பாகிஸ்தான் கூட்டு சோதனைச் சாவடி மீது காரில் வந்து மோதியது தொடர்பாக வெளிநாட்டுவாழ் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பஞ்சாபின் அமிர்தசரஸ் நகருக்கு 30 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது அட்டாரி- வாஹா கூட்டு சோதனை சாவடி மையம்.

இங்கு இன்று அதிகாலை அதிகாலை 3.30 மணிக்கு வேகமாக வந்த கார் ஒன்று முதல் வாயிலை உடைத்துக் கொண்டு, 'ஜீரோ பாயிண்ட்' எனப்படும் பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள வாயில் அருகே சென்றுவிட்டது.

விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட எல்லை பாதுகாப்பு படை போலீஸார், காரில் இருந்த கனடா நாட்டு குடியுரிமை பெற்றவரும் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்தவருமான 50 வயது மதிக்கதக்கவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதிக்குள் அவர் நுழைந்தது எவ்வாறு என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.