ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், பிரிவினைவாதிகள் இன்று காலை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் மூவரும், பொதுமக்கள் இருவரும் காயமடைந்தனர்.
ஸ்ரீநகரிலிருந்து சுமார் 14 கிமீ தூரத்தில் ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இத்தாக்குதல் நடைபெற்றது.
முக்கிய விருந்தினர்கள் செல்லும் பாதையை பராமரிக்கும் பணியை (Road Opening Party) மேற்கொண்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸார் மீது, பிரிவினைவாதிகள் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இதில் 3 வீரர்களும், 2 பொதுமக்களும் காயமடைந்தனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீஸார் தாக்குதல் நடைபெற்ற இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன, போக்குவரத்தும் தடைபட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.