ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஜம்மு: பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரர் பலி

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியான ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.

Updated On :23 நவம்பர் 2015, 10:08 am

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியான ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.

இன்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பலியான ராணுவ வீரர் கேரளாவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.