டிசம்பர் 16 பலாத்காரக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறார் குற்றவாளி, டிசம்பர் மாதம் விடுதலையாக உள்ளதால், அவரால் சமுதாயத்துக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுவதை தடுக்க வேண்டும் என்று கூறி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளனர்.
இந்த மனு மீது பதிலளிக்கும்படி, மத்திய, தில்லி அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
நிர்பயா பெற்றோர் தாக்கல் செய்த மனுவில்,
2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் படுபாதக செயல்களை செய்த சிறார் குற்றவாளி வரும் டிசம்பர் மாதம் விடுதலையாக உள்ளார்.
சிறார் குற்றவாளி என்பதால், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து வரும் டிசம்பர் மாதம் விடுதலையாவது குறித்து தாங்கள் அச்சம் கொண்டுள்ளதாகவும், தங்களது மகளுக்கு நேரிட்ட துயரத்தில் மிகப் பயங்கரமான தவறுகளை இழைத்தவர் விடுதலையானால், அவரால் இந்த சமுதாயத்துக்கும், தனி மனிதர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம். இதுபோன்றவர்களை தொடர்ந்து கண்காணிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட வேண்டும். அப்போதுதான், இதுபோன்றவர்களால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்.
இதுபோன்றவர்கள், குற்றம் இழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற மிகத் தவறான சிறார்களை விடுதலை செய்யும் போது, அவர்கள் மீண்டும் மோசமான தவறுகளில் ஈடுபட்டு, அதனால் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்கவும், சட்டத்தில் வழிவகை செய்யுமாறு பரிந்துரைக்கவும் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில், பாலியல் பலாத்காரக் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்கும் சொர்னா (பாலியல் பலாத்காரக் குற்றவாளிகள் பதிவுசெய்தல் மற்றும் கண்காணிக்கும் சட்டம்) சட்டத்தைப் போன்ற ஒன்றை கொண்டு வந்து அதனை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த மனித உரிமைகள் ஆணையம், மிக மோசமான சம்பவம் நடந்து, படுகொலை செய்யப்பட்ட மகளின் எந்தவொரு பெற்றோருக்கும் இதுபோன்ற ஒரு அச்சம் ஏற்படுவது இயற்கையான விஷயம் தான். இந்த அச்சத்தை நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


