ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ரயிலில் அடிபட்டு இரு கால்களையும் இழந்த இளைஞர்

விருதுநகரில் வெள்ளிக்கிழமை காலை ரயிலில் அடிபட்ட இளைஞர் ஒருவருவரின் இரு கால்களும் துண்டிக்கப்பட்டது.

News image
Updated On :16 அக்டோபர் 2015, 6:39 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகரில் வெள்ளிக்கிழமை காலை ரயிலில் அடிபட்ட இளைஞர் ஒருவருவரின் இரு கால்களும் துண்டிக்கப்பட்டது.

விருதுநகர், அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளி நாகேந்திரன் (29). இவர் காலைக் கடனைக் கழிப்பதற்காக அப்பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே சென்றுள்ளார். சற்று காது கேளாத அவர், காலைக்கடனை முடித்துவிட்டு தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கிச் செல்லும் விரைவு ரயில் வந்து கொண்டிருந்துள்ளது. அருகில் ரயில் வந்ததை அறிந்த நாகேந்திரன், தண்டவாளத்திலிருந்து வெளியே குதித்துள்ளார். இதில் இரு கால்களும் ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டிக்கப்பட்டது. அவரது உடல் முட்புதரில் போய் விழுந்தது. உடனடியாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து விருதுநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.