விசாகபட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் உள்ள பயோ டீசல் ஆலையில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து, 40 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க 36 மணி நேரமாக போராடி வருகின்றனர்.
தீயணைப்பு வீரர்கள் போராடியும் தீ இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. தொடர்ந்து தீ கட்டுக்கடாங்காமல் கொழுந்து விட்டு எரிவதால் அப்பகுதியே புகை மூட்டமாக காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலேயே ஆண்டுக்கு 5 லட்சம் டன்கள் பயோ-டீசல் எரிபொருள் உற்பத்தி செய்து வரும் நிறுவனம் பயோமெக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.