ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தில்லியின் நிர்வாக தலைவராக ஆளுநருக்கே அதிகாரம்: தில்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புது தில்லி யூனியன் பிரதேசம் என்பதால் அதன் நிர்வாக தலைவர் துணை நிலை ஆளுநர்தான் என்று தில்லி உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2016, 5:30 am

புது தில்லி: புது தில்லி யூனியன் பிரதேசம் என்பதால் அதன் நிர்வாக தலைவர் துணை நிலை ஆளுநர்தான் என்று தில்லி உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

தில்லியில் அதிகாரிகள் இட மாற்றம், அதிகாரப் பகிர்வில் யாருக்கும் அதிகாரம் உள்ளது என்பது குறித்து  தில்லி அரசு தொடர்ந்த வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், தில்லி மாநிலத்தின் நிர்வாக தலைவராக ஆளுநரே செயல்பட முடியும். தில்லி மாநில அமைச்சரவையின் முடிவு ஆளுநரை கட்டுப்படுத்தாது. அமைச்சரவை ஆலோசனையைக் கேட்கவேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது, தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.