தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி

பாகிஸ்தான் குவெட்டா நகரில் உள்ள மருத்துவமனையில் குண்டு வெடித்ததால் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Updated On :8 ஆகஸ்ட் 2016, 6:55 am

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் குவெட்டா நகரில் உள்ள மருத்துவமனையில் குண்டு வெடித்ததால் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குவெட்டா நகரில் உள்ள சிவில் மருத்துவமனையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை தொடர்ந்து பாலுசிஸ்தான் முன்னாள் பார் அசோசியேஷன்ஸ் தலைவர் பிலால் அன்வர் காசி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக டான் செய்திகள் தெரிவிக்கின்றன.

குண்டு வெடிப்பு சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது. இந்தக் குண்டு வெடிப்பில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.