

புது தில்லி: அருணாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் மூலம் அவர் அனுப்பிய இரங்கல் செய்தியில்,
அருணாசல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் தற்கொலை சம்பவம் கேட்டதும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு தைரியத்தைக் கொடுக்க இறைவனைப் பிரார்த்தித்து கொள்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.