ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பிகார் பொதுத் தேர்வில் முறைகேடு: முக்கியக் குற்றவாளி கைது

பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட பொதுத் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபரை மேற்கு வங்க சிஐடி மற்றும் பிகார் காவல்துறை இணைந்து கைது செய்துள்ளது.

Updated On :10 ஆகஸ்ட் 2016, 7:11 am

கோல்கத்தா: பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட பொதுத் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபரை மேற்கு வங்க சிஐடி மற்றும் பிகார் காவல்துறை இணைந்து கைது செய்துள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே கைதானவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் ஜின்ஜின்ஜிராபஜார் பகுதியில் பதுங்கியிருந்த விகாஷ் குமார் (39) கைது செய்யப்பட்டார்.

சிஐடி மூத்த அதிகாரி திலிப் அதக் அளித்த தகவலின் அடிப்படையில், பிகார் கல்வித் துறையின் தேர்வுப் பிரிவில் கிளர்க் மற்றும் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வந்த விகாஷ் குமார்தான் இந்த குற்றத்தில் பின்னணியில் முக்கிய நபராக இருந்து செயல்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

இவர், மாணவ, மாணவிகளின் விடைத்தாள்களை மாற்றுவதற்கு ஒவ்வொருவரிடம் இருந்தும் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.