ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஒரு குடும்பம் நாடாளுமன்றத்தை முடக்குகிறது: சோனியா மீது மோடி தாக்கு

ஒரு குடும்பம் நாடாளுமன்றம் நடைபெறுவதை தடுக்கிறது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை கடுமையாக சாடினார் பிரதமர் நரேந்திர மோடி.

News image
Updated On :5 பிப்ரவரி 2016, 10:53 am

ஒரு குடும்பம் நாடாளுமன்றம் நடைபெறுவதை தடுக்கிறது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை கடுமையாக சாடினார் பிரதமர் நரேந்திர மோடி.

அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகார்க் மாவட்டத்தின் மோரான் நகரில் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பேரணிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மோடி பேசியதாவது:

ஒரே ஒரு குடும்பம் நாடாளுமன்றம் நடைபெறுவது தடுக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்காக அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.  எதிர்க்கட்சிகளில் உள்ள சில தலைவர்கள் நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு தயாராக இருக்கும் நிலையில், ஒரே ஒரு குடும்பம் மட்டும் மாநிலங்களவையை நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தை 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் தரூண் கோகோய் தலைமையிலான அரசு எவ்வித வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றவில்லை.

வரவிருக்கும் தேர்தலில் அஸ்ஸாம் மக்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு வாய்ப்பளித்து அஸ்ஸாம் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றார் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.