

பெங்களூரு: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தேஜாஸ் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டுள்ளது.
2003-ம் ஆண்டு முதல் எதிர்பார்க்கப்பட்டு முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இலகுரக போர் விமானமான தேஜாஸ் இன்று இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்தனர் இந்திய விஞ்ஞானிகள்.
சூப்பர்சோனிக் ஒற்றை இயந்திர விமானம், தேஜாஸ், ஆகிய 2 விமானங்களையும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (HAL), ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜென்சி (ADA) இணைந்து வடிவமைத்துள்ளது. இந்திய முறைப்படி பூஜை செய்தும், தேங்காய் உடைத்தும் விழா நடத்தப்பட்டது.
இந்த விமானம் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கூட்டு முயற்சியில் உருவான ஜெஎப் - 17 ரக போர் விமானத்தைவிட அதிகசக்தி வாய்ந்ததாகும்.
நடப்பு நிதியாண்டில் இதுபோன்ற 6 போர் விமானங்களையும், அடுத்த ஆண்டில் 8 விமானங்களையும் தயாரித்து வழங்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த தேஜாஸ் போர் விமானங்களை, அடுத்த ஆண்டுக்குள் படையில் சேர்க்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.