புது தில்லி: கார்கில் போரின் 17-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான 1999-ம் ஆண்டு கார்கில் போரில், இந்தியா வெற்றி பெற உயிர்த் தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கார்கில் தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 17-வது ஆண்டு நினைவுதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டரில் கூறியதாவது:
கார்கில் போரின் 17-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. தாய்நாட்டின் மீது கொண்டிருந்த நேசத்திற்காக, உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். கார்கில் தியாகிகள் நினைவு தினம் நமது தேசத்தின் ராணுவ வீரர்களின் துணிச்சல், பலம் மற்றும் தியாகங்களை நமக்கு நினைவுப்படுத்துகிறது. அதோடு வீரர்களின் தியாகம் நமக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

இன்றைய ராசி பலன்கள் (24 ஏப்ரல் 2026) மேஷம் - மீனம்! பொறுப்புகள் கூடும் இந்த ராசிக்கு!

அக்னிப் பசி!

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


