நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கொச்சியில் சம்பவம்: ஆம்புலன்ஸ் வாகனம் வெடித்துச் சிதறி 2 பேர் பலி

கொச்சியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட 72 வயது நபரை ஏற்றிக் கொண்டு வயநாடு பகுதியில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் மீன்குன்னம் பகுதியில் எதிர்பாராத வகையில் வெடித்துச் சிதறியதில் நோயாளியும், அவரது மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News image
Updated On :27 ஜூலை 2016, 6:00 am

கொச்சி: கொச்சியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட 72 வயது நபரை ஏற்றிக் கொண்டு வயநாடு பகுதியில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் மீன்குன்னம் பகுதியில் எதிர்பாராத வகையில் வெடித்துச் சிதறியதில் நோயாளியும், அவரது மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆம்புலன்ஸ் வெடித்ததில் விஜே ஜேம்ஸ் மற்றும் அவரது மகள் அம்பிலி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களுடன் ஆம்புலன்ஸில் வந்த செவிலியர் லஷ்மி, ஜேம்ஸின் உறவினர் காயத்துடன் உயிர் தப்பினர். ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் செவிலியர் மெல்வின் ஆன்டணியும் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.

இவர்கள் 6 பேரும் கோட்டயத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் சென்று கொண்டிருந்தபோது, ஆம்புலன்ஸில் பொருத்தப்பட்டிருந்த  உயிர்காக்கும் கருவியில் இருந்து தீப்பொறி பரவியது. ஒரு சில நொடிகளில் அந்த தீப்பொறி ஆம்புலன்ஸ் முழுக்க பரவி, ஆம்புலன்ஸ் வாகனம் வெடித்துச் சிதறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகன ஓட்டுநரும் செவிலியரும் தீயைப் பார்த்ததும் ஆம்புலன்ஸில் இருந்து குதித்ததால் உயிர் தப்பினர். மேலும் ஆம்புலன்சில் இருந்த இரண்டு பேரை வெளியே மீட்பதற்குள், ஆம்புலன்ஸ் முழுவதும் தீ பரவி ஜேம்ஸும், அம்பிலியும் வாகனத்துக்குள்ளேயே தீயில் கருகினர்.

இதில் படுகாயம் அடைந்த செவிலியர் லஷ்மி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் ஆம்புலன்ஸ் வாகனம் முழுவதும் தீக்கிரையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.