தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட அசாம் விரைந்தார் ராஜ்நாத் சிங்

அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.

Updated On :30 ஜூலை 2016, 6:42 am

புதுதில்லி: அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 21 மாவட்டங்களில் 17 லட்சம் பேர் வெள்ளத்தில் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

நாகான், மோரிகான், காசிரங்கா ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகட்காங் பகுதியைப் பார்வையிட்ட பின்னர், அசாம் முதல்வரைச் சந்தித்து ராஜ்நாத் சிங் பேச உள்ளார். இன்று மாலை அவர் மீண்டும் தில்லி திரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.