தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தானேயில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 8 பேர் பலி!

மஹாராஷ்டிரா மாநிலம் தானேயில் பழைய இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்து விபத்துக்குளானது. இந்த விபத்தில் 8 பேர் பலியானார்கள்.

News image
Updated On :31 ஜூலை 2016, 10:40 am

மஹாராஷ்டிரா மாநிலம் தானேயில் பழைய இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இன்று காலை  இடிந்து விழுந்து விபத்துக்குளானது. இந்த விபத்தில் 8 பேர் பலியானார்கள்.

தானே மாவட்டத்தின் பிவாண்டி நகரில் உள்ளது கைப்நகர் பகுதி. விசைத்தறி தொழிற்கூடங்களுக்கு மிகவும் புகழ்பெற்ற பகுதி யாகும். இங்கு அமைந்துள்ள பழமையான இரண்டு மாடிகட்டிடம் ஒன்று இன்று காலை 8.30 மணி அளவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில்  8 பேர் பலியானார்கள்.

சம்பவம் குறித்து தகவல் கேள்விப்பட்ட உடன் பேரிடர் மேலாண்மை அணியினர், மாவட்ட தீயணைப்புத்துறை துறையினர் மற்றும் உள்ளாட்சித் துறையைச் சார்ந்த அனைவரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் மஹாராஷ்டிரா மாநில கடற்கரை பகுதிகள் முழுவதும் சனிக்கிழமை மாலை முதல் தொடர்ந்த பெய்து வரும் மழையின் காரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

முன்னரே  நகராட்சி நிர்வாகம் சார்பில்,  அந்த  கட்டிடத்தை அபாயமான கட்டிடம் என்றுஅறிவித்து எச்சரிக்கை விடுத்திருந்தது என்றும், அதையும் மீறி அங்கே  மக்கள் தனகியிருந்தனர் என்று உள்ளூர்வாசிகள்   தெரிவித்தனர் .

இது தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது

இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 22 பேர் அந்த கட்டிடத்தில் இருந்து மீட்கப் பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு  பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.