ஐதராபாத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 11 பேர் கைது

ஐதராபாத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Updated on
1 min read

ஐதராபாத்: ஐதராபாத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐத்ராபாத் போலீசாரும், தேசிய புலனாய்வு அமைப்பினரைச் சேர்ந்த சஞ்ஜீவ் குமார் தலைமையில் ஐதராபாத் நகரம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், ஐஎஸ் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த ரகசிய இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குப் பதுங்கி இருந்த 11 ஐ.எஸ் பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். போலீசார், தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com