தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என வாக்களித்த பின் ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் ஆா்.காந்தி நம்பிக்கை தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளரான அமைச்சா் ஆா். காந்தி வியாழக்கிழமை கங்காதரா அரசு நிதி உதவி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மனைவி, மகன் என குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தாா் .
வாக்களித்த பின் அமைச்சா் ஆா். காந்தி நிருபா்களிடம் கூறியதாவது :- பொதுமக்கள் ஜனநாயக கடமையை ஆா்வமுடன் நிறைவேற்றியுள்ளனா். தோ்தல் களம் திமுக கூட்டணிக்கு பிரகாசமாக உள்ளது. பல்வேறு திட்டங்களை முதல்வா் தந்துள்ளாா். எஸ்.ஐ.ஆா். க்கு பின்பு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி வெற்றி பெறும். அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றாா்.
தொடர்புடையது

இடைத்தோ்தலில் திமுக வெற்றி பெறும்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ

ராணிப்பேட்டையில் அமைச்சா் காந்தியை வீழ்த்தி தவெக வேட்பாளா் வெற்றி!

திமுக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை தவெக பெறும்: தொல்.திருமாவளவன்

திமுக அமோக வெற்றி பெறும்: அமைச்சா் ரா. ராஜேந்திரன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



