ரஷ்யாவில் பலியான கேரள தம்பதி: அடையாளம் காண ரத்த மாதிரிகள் அனுப்பி வைப்பு

துபாயில் இருந்து சென்ற விமானம் ரஷ்யாவில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியான கேரள தம்பதியினரின் உடலை அடையாளம் காண, அவர்களது உறவினர்களின் ரத்த மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் பலியான கேரள தம்பதி: அடையாளம் காண ரத்த மாதிரிகள் அனுப்பி வைப்பு
Updated on
1 min read

துபாயில் இருந்து சென்ற விமானம் ரஷ்யாவில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியான கேரள தம்பதியினரின் உடலை அடையாளம் காண, அவர்களது உறவினர்களின் ரத்த மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷ்யாம் மோகன் மற்றும் அவரது மனைவி அஞ்சுவின் உடல்களை அடையாளம் காண, அவர்களது உறவினர்களின் ரத்த மாதிரிகளைக் கொண்டு மரபணு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மரபணு சோதனைக்காக, மோகனின் பெற்றோரிடம் இருந்தும், அஞ்சுவின் தாய் மற்றும் சகோதரரிடம் இருந்தும் மருத்துவக் குழுவினர் ரத்த மாதிரிகளை சேகரித்ததாக நெருங்கிய உறவினர் ஒருவர் கூறினார்.

ஃப்ளை துபாய் போயிங் 737 ரக விமானம் ரஷ்யாவில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இந்திய தம்பதியரான மோகன் - அஞ்சு உள்ளிட்ட 62 பேர் உயிரிழந்தனர்.

மோகனும் அஞ்சுவும் ரஷ்யாவில் உள்ள ஆயுர்வேத மசாஜ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர் என்பதும், இரண்டு மாத விடுமுறைக்குப் பின் கடந்த வியாழக்கிழமைதான் இவர்கள் கொச்சியில் இருந்து ரஷ்யா திரும்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com