காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுடன் கன்னையா குமார் சந்திப்பு

தேசத் துரோக வழக்கில் கைதாகி பிணையில் வெளியேவந்துள்ள ஜேஎன்யு மாணவர்கள் அமைப்புத் தலைவர் கன்னையா குமார், இன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுலை சந்தித்துப் பேசினார்.
Updated on
1 min read

தேசத் துரோக வழக்கில் கைதாகி பிணையில் வெளியேவந்துள்ள ஜேஎன்யு மாணவர்கள் அமைப்புத் தலைவர் கன்னையா குமார், இன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுலை சந்தித்துப் பேசினார்.

ஜேஎன்யு பல்லைக்கழக மாணவர்கள் மற்றும் அனைத்திந்திய மாணவர் கழக உறுப்பினர்களுடன் இன்று  துக்ளக் சாலையில் உள்ள ராகுலின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் கன்னையா குமார்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த கன்னையா குமார் செய்தியாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.

ஜேஎன்யு விவகாரத்தில் கன்னையா குமாருக்கு ராகுல் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த சந்திப்பு அமைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com