மழைக்கு லீவ் விட்ட காலம் போய் புகைக்கு லீவ் விடும் காலம் இது
கடுமையான புகை மூட்டம் காரணமாக தில்லியில் சுமார் 1,700 துவக்கப் பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளன.


புது தில்லி: கடுமையான புகை மூட்டம் காரணமாக தில்லியில் சுமார் 1,700 துவக்கப் பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளன.
தில்லியில் உள்ள இந்த 1,700 துவக்கப் பள்ளிகளில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தெற்கு தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன், வடக்கு தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன், கிழக்கு தில்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட அனைத்துத் துவக்கப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்புக் கருதியே இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை நேரத்தில் கடுமையான புகை மூட்டம் இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி சனிக்கிழமை பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டதாக தில்லியின் உயர் அதிகாரி ஆர்யா தெரவித்துள்ளார்.
தீபாவளி முதலே தில்லியில் கடுமையான காற்று மாசு காணப்படுகிறது. மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு மாசடைந்து, வெளியே வரும் மக்களும் முகக் கவசம் அணிந்தே வெளியே வருகின்றனர். கடுமையான மாசு காரணமாக வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழைக்கு விடுமுறை விட்ட காலம் போய், தற்போது புகைக்கும் விடுமுறை விடும் காலம் வந்து விட்டதே என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...