அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக விரைவில் உரிய முடிவு: பிரகாஷ் ஜவடேகர் பேச்சு!

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி விரைவில்  உரிய முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்...

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:52 am

DIN

கோயம்புத்தூர்: புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி விரைவில்  உரிய முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

கோவையில் அமைந்துள்ள ஈஷா வித்யா குழும பள்ளிகளின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக ‘ஈஷா வித்யா தேசிய கல்வி மாநாடு’ கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது:

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது கொண்டுவரப்பட்ட கல்வி முறையையே  நாம் இன்னும் பின்பற்றி வருகிறோம். அது 'கேள்வி- பதில்' என்ற முறையிலேயே அமைந்துள்ளது. அதனால் தற்போதைய சூழலுக்கு  ஏற்ப கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

தனியார் பள்ளிகள் மட்டுமின்றி, அரசுப் பள்ளிகளிலும் சிறந்த கல்வி வழங்கப்பட வேண்டியது அவசியம். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், தங்களது குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்த்து, தரமான கல்வி கிடைக்க செய்ய வேண்டும் என கருதுகின்றனர்.

மாணவர்கள் அழுத்தம் இல்லாமல் படிக்க வேண்டும் என்பதன் பொருட்டு மத்திய அரசின் பள்ளிகளில் தேர்வு முறையை ரத்து செய்து விட்டோம். கல்வியின் தரத்தை உயர்த்தும் பொருட்டு பல்வேறு கோட்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக விரைவில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி உரிய முடிவு மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.