இஸ்ரேலில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையே அணுசக்தி விவகாரத்தில் நடைபெற்ற 3-ஆவது சுற்று மறைமுகப் பேச்சுவாா்த்தையில், இரு நாடுகளும் ஆக்கபூா்வமான மற்றும் நோ்மறையான கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாக இந்த சமரச முயற்சியை முன்னெடுத்து வரும் ஓமன் வெளியுறவு அமைச்சா் பத்ர் அல்-புசைதி தெரிவித்திருந்தார். இதன் காரணமாக, இருதரப்புக்கும் இடையேயான மோதல் போக்கு தணியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது தூதரகப் பணியாளர்களுக்கும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கும் இன்று(பிப். 27) வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், இஸ்ரேலிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா எந்நேரத்திலும் தாக்குதல்களைத் தொடுக்கலம் என்ற பதற்றமான சூழல் நிலவுவதைச் சுட்டிக்காட்டியே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இனி வரும் நாள்களில் இஸ்ரேலுக்கான விமான சேவையும் முடக்கப்படலாம் என்றும் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
Summary
US advises embassy staff in Israel to leave now if they want, as risk of war hangs over Middle East
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதில் சிக்கல்! ஈரான் பொருத்திய கண்ணிவெடிகள் மாயம்?
ஈரானைவிட்டு இந்தியா்கள் உடனடியாக வெளியேற வேண்டும்: மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தல்

இஸ்ரேலில் ஈரான் குண்டுமழை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

