நாடு முழுவதும் ரூ.1.5 லட்சம் கோடி டெபாசிட்: இயல்பு நிலைக்கு திரும்பும் ஏடிஎம்கள்

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை நாடு முழுவதும் ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரூ.1.5 லட்சம் கோடி டெபாசிட்: இயல்பு நிலைக்கு திரும்பும் ஏடிஎம்கள்
Updated on
1 min read


மும்பை: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை நாடு முழுவதும் ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கிகளில் மட்டும் ரூ.75,945 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும், ரூ.3,753 கோடி அளவுக்கு பழைய பணத்தைக் கொடுத்து புதிய பணமாக பொதுமக்கள் மாற்றிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் எஸ்பிஐ வங்கியில் ரூ.100 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் என ரூ.7,705 கோடி அளவுக்கு பணம் பொது மக்களால் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதை அடுத்து, விரைவில் அனைத்து ஏடிஎம்களும் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com