ரூபாய் நோட்டு விவகாரம்: நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களில் மோடி பங்கேற்பார்

ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடக்கும் விவாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு விவகாரம்: நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களில் மோடி பங்கேற்பார்
Updated on
1 min read


புது தில்லி: ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடக்கும் விவாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புது தில்லியில் இன்று நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ரூபாய் நோட்டு விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவாதத்தின் போது, பிரதமர் மோடி பங்கேற்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இரு அவைகளிலும் நடக்கும் விவாதங்களில் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று பாஜக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com