

புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக, ராணுவ படைப்பிரிவு தளபதி மாற்றப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உரி தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணை முடியும் வரை அவரை அப்பதவியில் இருந்து மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுளள்தாகக் கூறப்படுகிறது.
செப்டம்பர் 18ம் தேதி உரி பகுதியில் உள்ள ராணுவம் முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் பலியாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.