ஜிசாட்-18 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது: விஞ்ஞானிகளுக்கு மோடி வாழ்த்து 

ஜிசாட்-18 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Updated on
1 min read

புது தில்லி: ஜிசாட்-18 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள், ஜிசாட்-18, இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“தகவல் தொடர்பு செயற்கைக்கோள், ஜிசாட் 18, வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகள். நமது விண்வெளித் துறையின் பயணத்தில் இது முக்கிய மைல்கல்” என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com