மும்பை குடியிருப்பின் 20வது மாடியில் பயங்கர தீ விபத்து: 2பேர் உடல் கருகி பலி

தெற்கு மும்பையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இன்று காலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.
மும்பை குடியிருப்பின் 20வது மாடியில் பயங்கர தீ விபத்து: 2பேர் உடல் கருகி பலி
Updated on
1 min read


மும்பை: தெற்கு மும்பையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இன்று காலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.

தெற்கு மும்பையின் கஃப் பரேட் அருகே மேக்கர் சாம்பரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 20வது மாடியில் இன்று காலை 6.37 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்து நடந்த இடத்தில் தூங்கிக் கொண்டிருந்த 2 பேர் உடல் கருகி பலியானதாகவும், 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com