இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

'பிளாக்பக்' மான் வேட்டை: பிரபல இந்தி நடிகருக்கு எதிராக ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு!

அரிய வகை 'பிளாக்பக்' மானை வேட்டையாடிய வழக்கில் பிரபல இந்திநடிகர் சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக, ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2016, 12:49 pm

DIN

ஜோத்பூர்: அரிய வகை 'பிளாக்பக்' மானை வேட்டையாடிய வழக்கில் பிரபல இந்திநடிகர் சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக, ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

பிரபல இந்தி நடிகர் சல்மான் கான். இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு ஒரு படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் சென்றிருந்தார். அப்பொழுது அங்கே காட்டுப்பகுதிகளில் உள்ள ஆபூர்வ வகை 'பிளாக்பக்' வகை மான்களை வேட்டையாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது 2 வழக்குகள் போடப்படட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த விசாரணை நீதிமன்றம் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து சல்மான் கான் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 13 நாள்கள் மட்டும் சிறையில் இருந்த அவர், பின்னர் பிணையில் விடுவிக்கபட்டார்.

இதற்கிடையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை  எதிர்த்து சல்மான் கான் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி சல்மான் கான் மீதான தண்டனையை கடந்த ஜூலையில் ரத்து செய்தது.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தீபாவளி விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.