நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அன்னை தெரசா ஒரு ஏமாற்று பேர்வழி: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியின் சர்ச்சை பேச்சு!

அன்னை தெரசா ஒரு ஏமாற்று பேர்வழி என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :6 செப்டம்பர் 2016, 12:00 pm

அன்னை தெரசா ஒரு ஏமாற்று பேர்வழி என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிறு அன்று வாடிகனில் நடைபெற்ற  நிகழ்வில் போப் பிரான்சிஸ் அன்னை தெரசாவுக்கு 'புனிதர்' பட்டம் வழங்கி கவுரவித்தார். இந்நிலையில் முன்னாள்  உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தன்னுடைய முகநூல் பதிவொன்றில், 'சந்தேகத்துக்கிடமான நபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து அன்னை தெரசாவின் சேவை அமைப்பு  அதிக அளவில் நிதியுதவி பெற்றது குறித்தும், உலகின் பல்வேறு பகுதிகளில் அவருடைய  சேவை அமைப்புகள் மூலம் 500-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல்வேறு நிதி ஆவணங்கள் மற்றும் விசாரணை அமைப்புகளின் அறிக்கைகளை தன்னுடைய வாதத்திற்கு ஆதாரம் காட்டியுள்ள அவர், அன்னை தெரசாவை ஒரு அடிப்படைவாதி, ஏமாற்றுக்காரர் என்றும் விமர்சித்துள்ளார்.

கட்ஜுவின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் அவருக்கு கடுமையான  கண்டனங்களை பெற்றுத் தந்துள்ளதோடு, சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.