பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

இந்தியாவுக்கு திரும்பி வர முடியாது: விஜய் மல்லையா கோர்ட்டில்  தகவல்!

அந்நிய செலவாணி  முறைகேடு வழக்கில் ஆஜர் ஆவதற்காக இந்தியாவுக்கு திரும்ப முடியாது என்று பிரபல தொழிலதிபர் மல்லையா கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:14 pm

அந்நிய செலவாணி  முறைகேடு வழக்கில் ஆஜர் ஆவதற்காக இந்தியாவுக்கு திரும்ப முடியாது என்று பிரபல தொழிலதிபர் மல்லையா கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

கோடிக்கணக்கான ரூபாய் அந்நிய செலவாணி முறைகேடு வழக்கில் விஜய் மல்லையா இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று முதன்மை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம்  மல்லையாவுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி மல்லையாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் அஜய் பார்கவா மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் இந்திய அரசு அதிகாரிகள், மல்லையாவின் பாஸ்போர்ட்டை எந்த வித விசாரணையும் இன்றி ரத்து செய்துவிட்டனர்  என்றும், அதன் காரணமாக அவரால்  தற்போது இந்தியா வந்து விசாரணையில் பங்கேற்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.