வங்கதேசத்தில் நீர் கொதிகலன் வெடித்து விபத்து: 12 பேர் பலி

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள தொழிற்சாலையில் நீர் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானது.

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள தொழிற்சாலையில் நீர் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானது.

காசிபூர் பகுதியில் உள்ள டேம்பகோ தொழிற்சாலையில் இன்று காலை 6 மணியளவில் திடீரென நீர் கொதிகலன் பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 24 பேரில் 12 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com