ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மற்றொரு தீவிரவாதியின் உடல் இன்று காலை கண்டெக்கப்பட்டுள்ளது.
ஞாயிறன்று பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள், ஒரு காவலர் என நால்வர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, பூஞ்ச் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை மற்றொரு தீவிரவாதியின் உடல் கண்டெக்கப்பட்டுள்ளது.